Wednesday 26 December 2012

நட்பு !




நன்றி என்னும்
வார்த்தையில்
தீராதது என் நான்.



அவளென்று
அவனென்று
ஒன்று
இல்லவே இல்லை 
அம்மா என்னும் வார்த்தை ஒன்றேயென்று எண்னுகையில்.


கேள்விகளின்றி
தொடங்கி
கேள்விகளின்றியே முடியும் அன்பு.

#♥

ராட்டினம் போல் சுற்றும்
பொம்மையை
வேடிக்கை
பார்க்கும்
தொட்டில் குழந்தையாய்
அவர்களின்
சிரிப்புச் சத்தத்தை கேட்கும் நான்.

#♥


தொட்டில்
துணியாகிப்
போகிறது
சிலரின் நட்பு
அம்மாவின் வாசமாய்.

#♥

அம்மாவிடம் புடவை நூல் வாங்கி
தீப்பெட்டியில் 
பேசி சிரிக்கிறோம் அன்பில் நாம். 

#♥

ஒரு முத்தம்
கொடுக்கும்
ஈர்ப்பை
நேசத்தை
சிறு மெளனம் 
கொடுத்திடும்
இதயத்திற்கு
மெளனம் என்றும் 
கலையாத பேச்சு அழியாத குரல்.
#♥





Tuesday 25 December 2012

விடைபெறுதல் இல்லா நாட்களோடு நான் உன்னால் உன்னுடன் !

கவிதையென்னும்
பெயரில் கதை எழுதுகிறாய்
உன் வார்த்தையில் 
அழகுமில்லை
கவிதையுமில்லை 
சரிதானே !
நீ இருக்கிறாய் எல்லாமுமாய் !

போடா லூசு !



கடைத்தெரு 
அழைத்து சென்று
என்ன வேண்டுமென்றால்
கைகோர்த்து நட போதுமென்கிறாள்.


உள்ளொன்று
வைத்து
புறமொன்று
பேசத் தெரியா முடம் நான்.



உன் சப்த நெரிசலுக்குள்
குரலொன்று அநாதையாய்
ஜன்னல் ஓர இறுக்கைக்காக ஏங்கி அலறுகிறது
உன் சப்த நெரிசலோடு இறங்கி செல்லிறாய் நான் மட்டும் பயணிக்கும் வாழ்க்கை பேருந்திலிருந்து.



பிரிவில் 
அருகில்
நெருக்கத்தில் 
எனக்குள் நீ !
உன்னிடம் இழப்பதற்கு 
உனக்கான இன்னுமோர் 
நாள்தான்
நாளையும். 



இதயத்திலிருந்து
நழுவிச் செல்லும் (உன்) நினைவுகளை
இழுத்துப் பிடிக்கிறது 
கனவு.



உன்னை ஏன் நான் தேடிக் கொண்டே இருக்கிறேன்
உன்னை தேடாவிட்டால் 
நானே இல்லை என்பதால்தான்!
உன் வருகையில்லா 
நாளோன்றில்தான்
எனக்குள் 
நீ யாரென்று
தெளிவுபடுத்தினாய்
ஆம் எனக்கு நீ நான்.



விடுமுறையற்ற
வானம் உன் நினைவு.



உன் நினைவு வரும்வரை
நான் உயிரோடுதான் இருந்தேன்.

காதல் சேமிப்பில் நாட்கள்
கரைகிறது
காத்திருப்பு
நீள்கிறது நாளையாய்.
எவராலும் ஏற்றுக் கொள்ளப்படாத
பாவமாய்
மூலையில் முடங்கிக் கிடக்கிறது நான்.
மீட்டேடுக்க
குரல் எழுப்புகிறேன்
உன் நினைவொன்று
தொண்டையை
கொத்தி செல்கிறது
மீன்டும் எனக்குள்ளே
புழுங்கி
நசுங்கி
வெதும்பி
கடைசியில்
கண்ணீர் துளிகளாய் கரைகிறது காலம் இப்போழுதெல்லாம்
வீதி உலா சென்று நினைவுகளை சேமிப்பது
கண்ணீரென்னும் தனிமைக்கு உணவாய் மட்டுமே.
விடைபெறுதல் இல்லா
நாட்களோடு நான்
உன்னால் உன்னுடன் !


தேடலில்லா
தனிமை வேண்டும்..!
காத்திருப்பில்லா
காதல் வேண்டும்..!
அடிமைத்தனமில்லா
அன்பு வேண்டும்..!
பேதமில்லா பாதையாய் மனிதம் வேண்டும்..!



நாளையென்ற நம்பிக்கையோடு உலகம்
நான் நீயென்றே விழி மூடுகிறேன்
முடிவோ தொடக்கமோ நீயாகவே இருக்கட்டும் என்னி்ல்


தலையனையும்
உடலும்
உறங்கத் தயாராகிவிட்டது
தேவதையை
தேடிப் போன என்னைதான்
கானவில்லை.
இரவென்பது
உன் வெளிச்சத்தின்
வெட்கம்
என் இன்னுமோர் பகல்.
உன் மெளன தூண்டிலில்
சிக்கிக் கொண்ட 
மீனாய் என் குரல்.


நீ மட்டும் இருக்கும்
என்
இதயக் கூட்டிற்கு
நான் திரும்பவே இல்லை
வழி மறந்தேன் உன் நினைவால்.



உன் இருப்பு கொல்கிறது
என் இருப்பு
கொள்ளாமல்.

என் கணக்கு
வாத்தியார்
நக இடுக்கில் மாட்டிக் காண்ட காதிற்கும் 
உன் விழி இடுக்கில் மாட்டி கொண்ட இதயத்திற்கும் ஒரே வலி.
மறக்க முயற்சி 
செய்வதாய் சொல்லி
மீன்டும் மீன்டும் 
உன்னயே நினைக்கிறேன்
சொல்லில் அடங்கா காதலே
ஆரோமலே ! ..joe!

♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥ 

Sunday 2 December 2012

பிரிவினைவாதம்.


இறந்தவர்களை 
உறவாடி 
சாதியெனக்
கொண்டாடி
சாக்கடைபுழுக்களாய்  நெளிந்து இன்றுவரை
ஆன்மாக்களுக்கு
அமைதிகொடுக்காத நீங்களா அன்பை பயிரிட்டு
அமைதியை அருவடை 
செய்யப் போகிறிர்கள்.


மொழி இனம் மதம் சாதி அன்பு நட்பு துரோகம் இழப்பு இயலாமை
எதிர்பார்ப்பு 
ஏமாற்றம் உலகின் அத்தனை பிரிவினைவாதமும் இல்லா வீடாய் அமைதியாய் 
அந்த தோட்டம் கடக்கும் போதெல்லாம்
அழுகுரலொன்று 
கேட்கும் 
நானின்றி அமைதி தொலைத்த என் இடத்திலிருந்து .



சிற்பமாய் செதுக்கப்பட்டு
வரலாற்றை 
தொலைத்து
சாதி உணர்வோடு
உடைந்து
உயிர் குடிக்க 
ஒவ்வொரு ஊர்களிலும் 
காத்திருக்கிறது
ஒரு கற்ச்சிலை.



பிறர் மீதான கேள்விகள் மட்டுமே எல்லோரிடமும்
தனக்கான 
கேள்விகளென்று
அறியாமல்.



மாண்ட உயிர்களுக்கு
துனை நிற்கா உங்கள் கடவுள் 
நானே ஆண்டவென அழிப்பவர்களை அழிக்கா உங்கள் கடவுள் 

வருவாதாய் 
சொன்னவனும்
வரவில்லை
எழுவதாய்சொன்னவனும்
எழவில்லை
காப்பதாய்சொன்னவனும்
காக்கவில்லை
கொலைகார அரக்கர்களுக்கு
மனித உயிரைப் பற்றி சொல்லாத கடவுளைதான்
இன்னும் உலகம் வணங்குகிறது
வணங்குபவனை மட்டுமே காப்பானெனில்
அவன் கடவுளெ அல்ல சுய நலவாதி
மனிதனை விட தரக்குவறைவானவன்.

Sunday 11 November 2012

நானென்னும் நான் உங்களுக்கு துரோகிதான்.





தனிமையை
அதிகம்
நேசிப்பவன்
உறவுகளை
வெறுக்கிறான்
தனிமையை நேசித்துப் பழகாதிர்கள்
உலகம் யாரோவாகத் தெரியும்.


உறவுகளென்னும்
சொல்
கழுத்தை நெறித்தது
நட்பென்னும்
சொல் முதுகை நெறித்தது காதலென்னும்
சொல் 
இதயம் நெறித்தது
இயற்கையென்னும்
சொல் மட்டும்
ஏனோ சுவாசம்
நேசிக்கிறது
முத்மிடத் தோன்றுகிறது
இயற்கையாகி
இயற்கையை.


எந்த புன்னகைக்காக
ஏங்கினாயோ 
எந்த புன்ணகைக்காக
வாழ்ந்தாயோ
அந்த புன்னகையை
நீயே கிள்ளி எறிந்து விட்டு
தேடி அலைவாய்
எனில் நீ மனிதன்.


எதையாவது
மாற்ற வேண்டும்
என்ற எண்ணமே
உன்னையும்
என்னையும்
மாற்றி ஏமாற்றுகிறது.

நானே சாட்சி 
கூண்டில்
நின்று என்னை
நிருபிக்கிறேன்
உங்களிடம்
தண்டிக்கப்பட வேண்டியவர்கள்
நீங்களென தெரிந்தே
உங்களை நீதிபதிகளாக்குகிறேன்
எதிர்பார்ப்புகளுடன்
ஏமாற்றம் தருகையில் இடம் மாற்றம் செய்து
தண்டிக்கப்படுவிர்கள் நீங்கள் சத்தியவாக்கு வாங்கப்படமலேயே.


எண்ணத்தில் 
கைகள் விரித்து
அலறுகிறேன்
விடுதலை வேண்டுமென
உதடுகளில் 
புன்னகையோடு.

அழகு இல்லையென என்னும் 
உருவங்ளை உற்றுப்பார் 
தன்னை அழகாக்க அவர்கள் எடுத்துக் கொண்ட 
மெனக்கெடல் அழகாக இருக்கும்.

செயற்கை தொலைந்து
இயற்கை
அமைதியான
இருளில் 
செயற்கையொன்று அறிவுறுத்தியது 
காலம் கைவிட்டு போவதாய் டிக் டிக் டிக்கென்று...
உன் எண்ணங்கள்
ஏற்றுக் கொண்டால்
உன்மை என்கிறாய்
ஏற்றுக் கொள்ளா உன்மை உனக்கு பொய்யே 
அதே மன நிலையில் நானும்
உன்மையை துனிந்து சொல் நாம் உலகின் பொய்யென.

தொடக்கம் யாரோ தீர்மானித்தார்கள்
நான் முடிக்க வேண்டும்
இந்த வாழ்வை
இந்த நாளை..!
எல்லோரையும்
சுமக்க முயன்று
என்னையே சுமக்க
முடியாது தோற்கிறேன்..!
யாரோ சுமப்பதாய் சொல்லிக் கொண்டார்கள்
என்னை
நானும் சமப்பதாய் சொல்லிக் கொண்டேன்
அவர்களையே..!
நாளை நானில்லா என்னை சுமப்பார்கள்
இங்கே வைத்திருக்க
முடியாது
நான் சுமந்து
ஒளித்து வைத்த அவர்களிருக்கும்
இடத்துக்கு என்னையும் யாரோ.


இதயம்
பறி கொடுத்ததாய் 
எண்ணி
எங்கேங்கோ தேடுகிறோம்
விட்டுச் சென்ற 
பிணங்கள் அமைதியாய்.


தொட்டிலில்
அழுகுரல்
அதிகமாய்
கேட்கிறது
அழுகை நிறுத்த 
வெற்றுத் தொட்டில் அசைக்கிறேன்
அமைதி நிலவியது
எட்டிப் பார்க்கிறேன்
உறங்கிவிட்டேனா என்று
நானென்று தெரிந்தும்.

#நான் !




நானென்னும்
நான்
உங்களுக்கு
துரோகிதான்.




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...