Thursday 17 January 2013

ஆதரவற்றதாய் ஒரு காதல் !


வறுமையின் வழிநடத்தலில்
விரும்பியோ
விரும்பாமலோ
கல்வியை கைத்தொழிலை கட்டாயமாய்
கஷ்டத்தோடு
கஷ்டமாய்
கற்றிருந்தான்
 
கண்கள் அலைபாய்ந்திட
காதலென்னும்
சொல் காதில்
கம்பியாய் குத்திக் கிழிக்க
அவனுக்கான
தேவதையை
கதவுகளுக்குள்
பூட்டி அடை காத்திருந்திருந்தான்
கண்களை ஊமையாக்கி

விடுமுறையே
விதியென்றாலும்
வீதியில்
விளையாட்டு
பொருளாய் வேடிக்கை பொருளாய்
வழிப்போக்கனுக்கும் கேளிப்பொருளாய்
கேட்கபடும் கேள்விகளால்
ஆசைகளை அறுத்தெரிந்து
வீடு நுளைந்தால்
பாசத்தின் பார்வைகளும்
சலிப்பை ஊட்டும்
உண்னாது
உறங்காது கற்ற கல்வியும் கடனில் மூழ்கி

நிஜக் கனவுகளை அழித்து இனியும் ஆகாது
இந்த நரகம், நகரமே மேலென்று படியேறினால்
வரவேற்பதாய் சொல்லி
பாதணிக்கும்
பணம் வசூலிக்கும்
வாங்கும் வருமானம் வாய்க்கும் வாழ்வாதாரத்துக்கும் போதாதென்ற
நின்ற இடத்தின் நிலையில்

கடல் தாண்டிய பயணமொன்றில்
பொன் முட்டையிடும் வாத்து நீதானென்றான்
வயதை தொலைத்த முதிர் கண்ணனெருவன்
சொல்ல கண்கள் விரிய கனவுகளோடு
காணா தேசம்
ஓடினான் கனவு மூட்டை தாண்டிய
கடன் சுமையோடு


சொர்க்கமாயிருந்த பூமியில் சொந்தங்களற்ற
சோதனை பொருளானான்
பணியாளனென்ற
அடிமைப் பெயரோடு
எதற்கும் கேள்வி கிடையாதவனுக்கு
அசிங்கமோ அவஸ்த்தையோ
அத்தனையும்
அஜீரனக் கோளாராய்
சுமநது
மூலையில் முடங்கி கிடந்தான்


வாயைக்கட்டி வயித்தைக் கட்டி
விடுதலைக்காக
போராடும் போராளியாய்
போராட்டமாய்
தினம் தினம்
போர்முனையில்
சிரிப்பதாய் நடிக்க தொடங்கி
நடிப்பே வாழ்க்கையாய்
வாழக் கற்றான்

நல்லதோ கெட்டதோ செய்தியாய்
காற்றில் மீட்டெடுக்க முடியா தவறிய இறகாய்
மிதக்க மீள முடியா ஏக்கத்தில்
எழுதப்பட்டதென
பெருமூச்சில்
தனக்குள் புதைத்தான்


முதல் வருடம் கடனுக்காக
அடுத்த வருடம்
வறுமைக்காக
அடுத்த வருடம்
வாழ்வாதரத்திறக்காக
எந்திரமாய்
வாழ்ந்து
வருகையில்
வாசலில் கோடரி தைலத்திற்கும்
கோல்ட் வாட்சுக்கும் காத்திருந்தது
எத்தனை மாசம் விடுமுறையென்னும் கேள்வியோடு
கனவுகளை நொறுக்கிய கூட்டம்


வந்ததும் வராதாதுமாய்
வந்ததும் வேறு உலகமாய் தெரிய
மூன்று வருடக் கதையை மூன்று நாளில் தேரிந்து
இழப்புகளில் வாழத் தொடங்கும் பகல்களோடும்
உதிரும் நாட்களை எண்ணிக் கொன்டிருக்கும்
இரவுகளோடும்
நலமாய் நடிக்க வேண்டும் நான்
நீங்கள் காண தேசம் வெறுமையில் வென்றவனென்று

வாழ்ந்திட வழிக் கிடைத்ததாய்
வாழ்க்கை துனை தேடல் தொடங்க
வெளிநாட்டு மாப்பிள்ளையா
வேண்டாமென்று
அவள் நினைத்தாலும்
வேண்டுமென்றே
அவர்கள் நினைக்க பிடித்தும் பிடிக்காமலும்
நிச்சயம் செய்து
திரும்புவான் காதலி கிடைத்தாலென்று

தொலை வழியில் பேசி சிரித்து ஓய்வில்
காதல் வளர்த்து காலத்திற்கான காத்திருப்பில்
காயங்களோடு
கண் மூடாது
கனவு வளர்த்து
கையாளாகாத
கவிதையோடு
மீன்டும் திரும்பி திருமணம் முடித்து
காரியம் முடிந்தது காரணம் கிடைத்தென
கடல் கடந்து கல்லாய் வாழ்து கொண்டிருந்தான்
கடல் கடந்த ஒரு காதலன்.


Wednesday 16 January 2013

"மழை"...!!!!





நிலவைத் திருடிக் கொண்டு ஒளியும் இல்லை
துளியும் இல்லையென 
கண்சிமிட்டி 
சிரிக்கிறாள்
மின்னலாய். 

ஓவ்வொரு
இடிச்சத்தமும்
இதயத்தில்
உறவுகளின்
துடிப்பாய் வெடிக்கிறது...

எங்கே விழுந்தாலென்ன
பாதைகள்
தீர்மானிக்கும் நம்பிக்கை என்னில் மழை



உன் நிழல்
குடை பிடிக்க
முடியா அன்பு மழை.


 
நீ வேண்டாமென
நினைக்கும் போதெல்லாம்
நானே வேண்டாமென
நினைக்கிறேன்.

தினமும் உன் நினைவுகளை நடை பாதையெங்கும்
விட்டுச் செல்கிறேன்
நாளைய தனிமை தவிர்க்க.


போ உன் பேச்சு கா
நீ பார்க்க குழந்தையை
கொஞ்சியதை
மனதில் வைத்துக் கொண்டு வரமறுக்கிறாய்
போ உன் பேச்சு கா !




ஒளிந்து கொல்லாதே
உன்னை
என்னால் தேட முடியாது
அத்தனையும்
உதறி தள்ளி வீதி வந்தது உன்னை கொஞ்சி விளையாடத்தான் வா !



ஒருபிள்ளை
வாழும்
வீட்டின்
வெறுமை
நிரம்பி வழிகிறது
உன் வருகையால்.


முற்றுப்புள்ளி
தீர்மானித்து
இயற்கை எழுதும் கடிதம்
நீ .


நாசி தொட்டது
உன்வாசம்
இங்குதான்
அருகில்தான்
இருக்கிறாய்
முத்தமிடப்போகும்
நேரம்
தூரமில்லை.



புன்னகைச்
சத்தம்
நிறம்பிய
தொட்டில்

நீ

கருவறை
ஒன்றென
கொண்டாடும்
புன்னகை

நீ



என் தோள்களின்
பள்ளத்தில்
மழலையாய் நீ.


நீ
ஒதுங்க
தொடங்க ஈசலாய்
நகர்கிறான்
மனிதன்..!




எல்லா வார்த்தையும்
உறங்கட்டுமென
காத்திருக்கிறது உனக்கான ஓர்
வார்த்தை...






  

Tuesday 15 January 2013

புறக்கனிக்கப்பட்டவர்கள் நாம்தான்...!

நான் யாரென்ற
கேள்வி கேட்டு கொண்டே இருந்தது
தேருவோரம்
தலைசாய்க்க
புத்தி சொல்லிற்று
கால்கள் பயணிக்க
கல்லறை போன்ற கூட்டில்
படியேற எனக்காக
காத்திருந்தார்கள் அவர்கள்,
யார் நீங்களென கேட்கும்
முன்பே
உரிமை கொண்டாடினர்
மகனென்று,
உள் சென்றேன்
அண்ணா என்றால்
ஒருத்தி மகன்
தொலைந்து அண்ணாவானது நான் !
பின்னந்தலை தட்டி தம்பி என்றாள்
அக்கா அண்ணன் போய்
தம்பியானது !
சற்றும் எதிர்பராது
கால்கள் கட்டிக்
கொண்டு மாமா என்றாள்
மழலையவள் தம்பி போய் மாமா ஆனது நான் !
வாசல்
தேடி வந்து நண்பனென்றான்
ஒருவன்
நண்பனானது நான் !யாரென்ற
கேள்வி இன்னும் தொடர
அலைபேசியில்
அழைத்து நீ என் கணவன்
என்றால் அவள் அனைத்தும் தொலைந்து கணவனானது நான் !
ஓரு வீட்டிற்குள் என
நானின் பிரிவுகள்
இத்தனையா !

யார் நானென்ற
கேள்வி இன்றுவரை விடை தெரியவில்லை தெரிந்த
ஒருவன்
நானகவே இருந்தான்
சாலை ஓரத்தில்
யாருமின்றி சுதந்திரக்
காற்றாய்.


ல்லைகளற்றவனாய்
மரணம்
காத்திருக்கிறது அவன் வருகைக்காக,

கையில் கிடைத்ததை உண்ணுகிறான்
மூடி மறைக்க ஏதிமில்லை ஓடி ஒளிய தேவையுமில்லை

ஆதி அந்தம் அவனாய் அனைத்துக்கும் உரிமையாளனாய்
சுதந்திரமாய் சுற்றி திறிகிறான் அங்கொன்றும் இங்கொன்றுமாய்

தன்நிலை மறந்தவனுக்கு சூட்டிய பெயர்களை பற்றிய கவலை இல்லை
அவனை பொருத்தமட்டில் உயிர்கள் அவன் உலகில் வாழும் தன்னைப்போல் இன்னுமோர் உயிர் மட்டுமே புறக்கனிக்கப்பட்டவர்கள் நாம்தான் அவனின் நிர்வாணத் தேசத்தில்.




Saturday 12 January 2013

மழலையின் மொழிகள் ♥♥♥.


விளையாடவோ 
கொஞ்சிடவோ
சிரிக்கவோ யாருமில்லை 
இயந்திரமாய்
ஓடிக்கொண்டிருந்தது
நாட்கள்
பதிலற்ற கேள்விகளால் விடை கிடைக்குமென 
நம்பி உயிருள்ள பொம்மையொன்று 
உயிரற்ற பொம்மையை 
துன்புருத்த தொடங்கிருந்தது.





 இனி நாம் எதற்காக
சிரிக்கிறோமென்பதே அவர்களுக்கான இலக்கு.

இருப்பின் காரணமும்
இல்லையின்
காரணமும்
சொல்லி விடுங்கள்
அவர்களாய்
தெரிந்து கொள்கையில்
நீங்கள் யாரோவாகிடக் கூடும்.
அவர்களின்
கன்னங்களின்
வறட்சி 
உங்களுக்கான
ஆயுதமேந்தல்
உதட்டின் 
வரட்சி 
உங்களுக்கான
பழிப் பல்லதாக்கு.
இரகசியம் பேசும் புத்திசாலிகளாய் ஒளிந்து
கொள்கிறிர்கள்
அவர்கள் உங்களை திருடர்களாய் பார்க்க 
தொடங்கி நாளை உங்களை ஏமாற்றுவதற்கான 
காரணங்கள் சேமிக்க தொடங்குகின்றனர்.
அஞ்சி 
அஞ்சி 
பொத்தி பொத்தி
பார்த்து பார்த்து சுத்தங்கள் 
நடுவில் பாதுகாத்து
குப்பைக்குள்
அனுப்பும்
சுயநலவாதிகள்
நாம்.

வயதுக்கு மீறிய சுதந்திர சிறகுகளை
விதைத்து
விதிமுறை சிறைக் கம்பிகளை வேலியாக்குகிறோம்
கூர் தீட்டி திருப்பி எறிகிறார்கள்
சிறகடிப்பின்
வேகம் கொண்டு வலிகளை ஏற்றுக்
கொள்ளுங்கள் வேறு வழில்லை இனி நமக்கு.
இதயம்
பூட்டிய
காத்திருப்பில்
அவர்கள் 
உலகை 
திருட்டுப் பூனைகள் 
உருட்டத்தான்
செய்யும்.
நடை வண்டியின் நட்பைத்தான்
இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்,
சக்கரங்கள்
தொலைந்தாலும்
காலம் தள்ள கற்றுக் 
கொடுத்தது அந்த நட்புதான்.

உடைக்காமல் விளையாட
கற்றுக் கொடுக்க தயாராயில்லை
உடைந்தால்
வேறொன்றோ
ஒட்டவைத்து ஏங்க வைக்கவோ 
தயாராவே இருக்கிறோம் பொம்மையில் 
தொடங்குகிறது
பொம்மலாட்ட
வாழ்க்கை.
 பாதுகாப்பில்லா
உலகம் உருவாக்கி
வாசற்படியில்
பாதணிக் கணக்கை கூட்டிக் கொண்டிருக்கும் நாம்,
பாவிகள் அவர்களுக்கு. 

 


Thursday 3 January 2013

மிருகம் ஈன்றிடும் தெய்வம்.



முகவரியற்ற துக்கம் நிகழந்த
வீட்டிற்கு
முகவரி சொல்லிட
சென்றார்கள் அவர்கள்,
அவள் இன்னும் 
உயிரோடுதான் 
இருந்தாள் ஆயிரமாயிரம்
கேள்விக்குறி வளைவுகளோடு !

சமுதாயத்தையே
மூடுமளவிற்கான
போர்வை போர்த்திருந்தார்கள்
அவள்
எச்சிலில் மிஞ்சிய மிருகத்தின்
உன்மை முகம் மறைத்திடவும்
சக மிருகத்தின் அடையாளம் தேடும் மிருகங்களும் வருமென்று !

அரசன் அனுப்பினானென்று
பாதுகாக்க தவறிய கல்லப் பருந்துகள்
ஆராய்ச்சிகளை தொடங்கின
மிருகத்தின் அடையாளம் தேடி
சலணமின்றி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்
அழுகை தீரும்வரை ஊர் வேடிக்கை பார்த்திருக்க
உளறிக்கொண்டிருந்தால் கண்ணீரில்
காகிதம் நிறம்பியதும்
விடை சொல்லியாக வேண்டிய
தனக்கான கேள்விகளுக்கான கேள்விகளை கேட்டு
கிளம்பிச் சென்றான் விடை கிடைத்தனவென்று

கூடியிருந்த கூட்டத்தில் புடவைகள் சரி செய்தவன்னம்
சாபமிட்டார்கள்
அவளைப் போன்றவர்கள்
வேறு வழியின்றி
மீசைகள் முறுக்கி நாங்கள் பாரதி வழிவந்தவர்கள்
பெண்ணியம் போற்றி பாதுகாக்க பிறந்தவர்களென்றது
கோசமிட்டது ஒரு பெருங்கூட்டம்

எட்டிப் பார்க்கவில்லையென்ற பழியை துடைக்க வந்து சென்றனர்
கரைக்கு காரணமான அனைத்து கரைவேட்டிகளும்
ஒவ்வொரு போராட்ட குழுக்களும்
தனித்தனி பத்திரிக்கை வைத்து
அவளை இன்னும் நடைபிணமாக்க
காத்திருப்பதாய் சொல்லாமல் சொல்லி சென்றார்கள்

எல்லாம் முடிந்தது மாலை வீடு திரும்பியவர்கள்
மனம் நொந்து பழித்து நாளையை எண்ணி பயந்து
உணவற்று உணர்வில் உறக்கமற்று கிடந்தனர் ஒரு சிலர்,
ஏனையோர் உண்டார்கள் உறங்கினார்கள்
நாளைகளைப் பற்றிய கவலையின்றி
எனில் ஏற்கனவே
நடந்திருந்தது பல சதை திண்ணும்
மிருகங்களுக்கான பாராட்டு விழாக்கள் பாதுகாப்பாய்

விடிந்ததும் தேநீர் கடை தொடங்கி தொலை தொடர்புகடை வரை
அவள் விற்பனை பொருளானால்
சில தினங்கள் விற்றபின்
அவள் வாழ்க்கையை வேடிக்கை பார்க்க தொடங்கியது
உலகம் வாடிக்கையான ஒன்றென

மீசை முறுக்கிய பாரதிகளை காணவில்லை
என் வீட்டில்தான் தேடியவன்னம் இருக்கிறாள்
ஆசைகளற்று அழுகையோடு உயிரற்ற உணர்வற்ற
சுதந்திரமற்ற சதையாய்
மிருகம் ஈன்றிடும் தெய்வமாய்.





LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...