Monday 18 March 2013

பாலாவின் "பரதேசி"





பாலாவின் "பரதேசி"

"இவன்தான் பாலா"
புத்தகம் படித்தவர்களுக்கு பாலாவிடமிருந்து இப்படியொரு சினிமா அதிசயம்தான்

இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத எந்த சூழலிலும் போங்கி எழாத
கதாபாத்திரம்தான கதைநாயகன்

பஞ்சத்திலிருருந்து பிழைப்பு தேடிச் செல்லும் பயணத்தில் நிலத்தின்
தன்மையை வழிவழியாக மாற்றி கதையின் வலியை காண்பித்திருக்கிறாய்,  உயிர்
இருந்தும் மயங்கிய நிலையில் கிடக்கும் உடலை உயிரோடு விட்டுச்செல்லும்
மக்கள் மனநிலையில் பஞ்சத்தின் சாவு புதிதல்ல என்பதாய் பதிவு செய்துள்ளார்

அந்த இடைவேளை காட்சியில் அந்த ஒரு ஷாட்டே இயக்குநர் பாலாவுக்கு போதும்

இதுவரையிலான
பாலா படங்களில் கதாபாத்திரங்கள் கொஞ்சம் மனநிலை பாதிக்கபட்டது போல்
இருந்தாலும் ஹிரோயிசமிருக்கும்
இந்த படத்தில் ஹிரோவே கிடையாது நடித்த அத்தனை மக்களும் ஹிரோதான்
எப்படித்தான தேர்ந்தேடுத்தாரோ அந்த கால மக்களை போன்ற வயதான முகங்களை அத்தனையும் சிறப்புதான்
எந்த ஒரு முகமும் நடித்ததாய் எனக்கு தெரியவில்லை, அப்படியான ஒரு சிறந்த படம்

கலை இயக்குநர் ஒளிப்பதிவாளர்
பாலாவின் கண்களாய் வாழ்ந்திருக்காங்க,
கதையைப்பற்றி நான் சொல்வதாயில்லை
படம் முடியும் தருவாயில் நல்ல வேலை அந்த காலத்தில் நான் பிறக்கவில்லை
என்ற நிம்மதியும்
இப்போதைய நாடுகளில் பிழைக்க சென்றவர்கள் வாழ்வாதரமற்வர்கள் நிலையும்
நாளை நமக்கும் இதே நிலை வரலாமென்ற அச்சமும் வருகிறது அதுதான் அவரின்
வெற்றி

படத்தில் எனக்கு தெரிந்த குறை
இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார் மட்டுமே இசைஞானி இளையராஜாவை தேடாமல்
இருக்க முடியவில்லை இசைஞானி இளையராஜாவா இருந்திருந்தால் இந்த திரைப்படம்
இன்னும் சிறப்பா இருந்திருக்கும்
ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்த ஆயிரத்தில் ஒருவன் பின்னனி இசைக்கு இது குறைவுதான்

மேலும் தன் மிது மக்கள் வைத்திருக்கும் நம்பிகையை காப்பாற்றிவிட்டார்
இயக்குநர் பாலாவின்
இதுவரையிலான படங்களை விட இது சிறந்த படம் இசைஞானியிருந்திருந்தால் இன்னம்
இன்னும் கொண்டாடியிருக்கும் உலகம்.

இறுதியா இயக்குநர் பாலா அவர்களுக்கு உங்கள் அத்தனை படங்களிலும் யாராவது
சாவுறாங்க சாகடிக்கப்படுறாங்க எப்போ யார் சாவாங்களோன்னு படம் பார்க்க
வேண்டிருக்கு அடுத்த படத்திலாவது யாரையும் சாகடிக்காதிங்க
அதுக்காக ஜாலியா படம் பன்றேன்னு அவன் இவன் போல படம் தயவு செய்து
எடுத்திறாதிங்க,  நாங்கள் தொலைஞ்சதா நினைச்ச அடையாளம் மீட்டு எடுத்து
மறுபடியும் உங்களை மக்கள் மத்தியில் கலைஞர்கள் மத்தியில் நீங்கள்
யாரென்று  நிறுபிச்சிட்டிங்க

எது எப்படியோ விருதே வேண்டாம்னு நீங்க சொன்னாலும் நிச்சயமாக நிறைய
விருதுகள் உங்களுக்கு உறுதி

பரதேசி பார்க்க வேண்டிய படைப்பு
தமிழகத்தால் கொண்டாடப்படவேண்டிய இயக்குநர், பாலா...


Wednesday 13 March 2013

Rev Theory Something New Lyrics


Rev Theory – Something New Lyrics
Love to hate repeating my mistakes
Now there’s no one left to listen, no one left to listen
Take a chance, a f*cked up consequence,
When there’s no one left to listen, no one left to listen

Chorus:
Right now we’re taking control
Tired of waiting, tired of waiting for something new
Right now we’re taking control
Tired of waiting, tired of waiting for something new
something new, something new, something new

ṗressed the knife and feed the sacrifice
When there’s no one left to listen, no one left to listen
Say goodbye, you will die tonight
And now everyone will listen, everyone will listen

Chorus:
Right now we’re taking control
Tired of waiting, tired of waiting for something new
Right now we’re taking control
Tired of waiting, tired of waiting for something new
something new, something new, something new

Cause it’s never enough to know the truth
When you lost all you know, there’s nothing to lose

Chorus:
Right now we’re taking control
Tired of waiting, tired of waiting for something new
Right now we’re taking control
Tired of waiting, tired of waiting for something new
Right now we’re taking control
Tired of waiting, tired of waiting for something new
something new, something new, something new
[Lyrics to Something New by Rev Theory]



http://youtu.be/8J0pEfbJ5Kg

Wednesday 6 March 2013

என் கடைசி உயிராய் கெஞ்சிக் கிடக்கிறது நான்...!!




இறப்பின் வாயிலில்
ஆயிரமாயிரம்
தோள்கள்
நட்பு பாராட்ட
பாரபட்சமின்றி
ஒதுக்கித் தள்ளி
மடியொன்று தேடும் வலிதான் நீ.
                          ♥♥♥.
உடல் பசியோ
உணவுப் பசியோ
உணர்வுப் பசியோ அல்ல நீ உயிரின் பசி நீ.
                          ♥♥♥.
இன்னும் இன்னுமாய்
விலகிச் செல்
நானென்பதே
மறந்து மறத்து
போகட்டும்
நானே நீயாகும்வரைதான்
உன்னால் துரத்த முடியும்
இன்னும் இன்னுமாய் விலகிச் செல் நீ.
                           ♥♥♥.
இப்போதும்
எப்போதும்
உனக்குப்
பிடித்த பாடலை
நீயாகவே கேட்கிறது நான்.
                          ♥♥♥.
பெரிதான தவறுகளொன்றும் செய்திட வில்லை
உன்னை அதிதமாய் தேடியதை தவிர.
                          ♥♥♥.
இதோ எனக்கான
உறவுகள்
காத்திருக்கிறது
எனக்கான
உலகம் உறக்கம்

எனக்கான எல்லாமே காத்திருக்கிறது
நான் உன்னோடுத் இருக்கிறேன்.
                           ♥♥♥.
இப்படித்தான் நீயென்றாலும்
எப்படியும்
என்னால் உன்னை விலக்க முடிந்ததே இல்லை.
                           ♥♥♥.
இரவுகளை கொய்து
உனக்கான
கனவுகளை
செதுக்குறேன்
நீயோ வாசலை தொலைத்திருந்தாய் .
                          ♥♥♥.
நான் முட்டாளென்பதை
காட்டிலும்
உன் பைத்தியமென்பதே
எனக்கான முக்கியமாய்.
                          ♥♥♥.
இனி பேசப்போவதில்லைதான்
நான் இறந்தவனென்று
உலகம் உனக்கு
நிருபிக்கும்
நீ வாழ் வாழ்ந்திடு
                       ♥♥♥.
உனக்கும் எனக்குமான
பாடலில்
உனக்கும்
எனக்குமான
ஊடலில்
உனக்கும்
எனக்குமான
காதலில்
எப்போதும்
எதோ ஒன்று
சாலைகளில்
தேநீர் கடைகளில்
தனிமையில்.
                      ♥♥♥.
எனக்கான ஒன்றான உன்னைத்தேடி
பாதைகளை
தொலைத்து விட்டேன்
முடிந்தால்
கைப்பிடித்து
வீடு சேர்
அவர்களுக்கான
எண்ணிக்கையில்
ஒன்று குறைவதாய் காத்திருக்கக் கூடும்
அவர்களாவது
நிம்மதியாய்
உறங்கட்டும் உன்னால்
                       ♥♥♥.
என்னை சுற்றித்தான்
எனக்கான
கெண்டாட்டம்
உணர்வற்று கிடந்தது நான் மட்டுமெ .
                        ♥♥♥.
உனக்குஎழுதபட்ட
கடிதங்கள்
எனக்கே
திரும்பி
வருகின்றன
என்னோடுதான்
இருக்கிறாய்
நீயாக.

என் கடைசி உயிராய் கெஞ்சிக் கிடக்கிறது நான்.  ♥♥♥.

 

"முகப்புத்தகம்"



"முகப்புத்தகம்"
அதான்பா மூஞ்சியே காட்டாமல்
இருக்கும் பேஸ்புக்கு, நிறைய பேஸ் பன்ன வைச்ச புத்தகம்,:-) உள்ளே
நுலையசுல எதோ
கள்ளக் கடத்தல் கும்பலுக்கு நடுவுல சிக்கினாப்புல இருந்திச்சு, இப்போவரை
கொஞ்சபேருதான் என்னையும் மனிஷனா ஏத்துக்கிட்டாய்ங்க நிச்சயமா
அவுங்களுக்கு பெரிய மனசு அவுங்களுக்கு ஒரு கும்புடு போட்டுக்கிறேன்
/\

நிறுத்து இப்போ இன்னா சொல்ல வர்ற நீய்யின்னு கேட்கிறது காதுல விழுது
இதோ பாயின்ட்டுக்கு வந்திட்டேன்

1,மூஞ்சிப் புத்தகம் வேலையில இருக்கிறவங்க வெட்டியா செய்ற வேலை
அதையே வேலையா செய்தா வெட்டியான் கூட மதிக்க மாட்டான்

2,இங்க நல்ல கருத்தோ கவிதையோ கதையோ திட்டமோ எதையுமே 10 சதவீதத்திற்கு
மேல எவனும் மதிக்க மாட்டாய்ங்க ஐயோ பாவம் அது தமிழுக்கே காலம் காலமா
தமிழனே செய்ற துரோகம்தான்.

3,லைக் வாங்க ஆசை படுறிங்களா ஒன்னும் பெரிசால்லாம் வேண்டாம் அன்றைய
அரசியல் பதிவும் அதுக்கு பொருத்தமா கவுண்டமணி , சந்தானம் ,டயாலாக்
போதும் லைக் அள்ளிக்கலாம்

3,அப்பாடக்கர் பதிவர்னு ஒருத்தர் கிடையாது
அவர் நிச்சயமா போழுதுபோக்குக்காக முகப்புத்தகத்தை தெளிவா
பயன்படுத்துவார் அவ்ளோதான்

4,அப்புறம் அரசியல் போரடிச்சிச்சின்னா இருக்கிறவங்களையே ஒருத்தரை மாத்தி
மாத்தி கழுவி கழுவி ஊத்தி விளையாடுவாங்க
5, இன்னும் ஒரு சிலர் இருக்காங்க லைக்தான் சோறுன்னு நினைச்சுகிட்டு தன்
போஸ்ட்டையே பே ன்னு பார்த்திட்டு இருப்பாங்க அடுத்தவங்க போஸ்ட்டுக்கு
லைக் போடவே மாட்டாங்க
அப்படியும் லைக்க கிடைக்கலை என்னமோ பல ஆயிரம் புத்தகம் படித்து புதுசா
கன்டு பிடிச்சிட்டேன்னு TAGGING பன்னுவாங்க என்னன்னு பார்த்தா குட்
மார்னிங்குன்னு இருக்கும் செம கடுப்பேத்துவாய்ங்க

பார்த்திங்களா லைக் பற்றி பேசினா இன்னோரு பதிவு எழுதனம் போல அவ்ளோ
பஞ்சாயத்து நடக்குது

இதுவரை எனக்குத் தெரிந்து லைக் பற்றி கவலைப்படாத நபர்கள் ஒரு 20 பேர்
இருப்பாங்க இதுவே அதிகமோ !

ஆங் எதையோ எழுத ஆரம்பிச்சு எதோ எழுதுறேன்ல அது வழக்கமா நடக்கிறதுதான
பாஸ் விடுங்க விடுங்க

கடந்த வருஷம் மொக்கையா உள்ள வந்தேன் ஓ இப்பவும் மொக்கைதான்ல :-)

அப்படி மெக்கையா வந்து லைக் போட ஆரம்பிச்சு கமென்ட் போட ஆரம்பிச்சு
எழுதவும் செய்தேன் நான் செய்த உருப்படியான விசயம் என்னன்னா இன்பாக்ஸை
எட்டிப்பார்க்காததுதான்

ஏன்னா எனக்கு நல்லா தெரிஞ்சவர்களிடமே மூஞ்சை கொடுத்து பேசமாட்டேன்
அவ்ளோ அடக்கம்லாம் இல்லை அநாவசியமா ஆகாத விசயத்தை பேசுறது வீனென்ற
எண்ணம் நெருங்கிய நண்பர்கள் பேசி சிரிக்கும் போதும் சிரிப்பேன் எனக்கு
மட்டும் தெரியுற மாதிரி அவ்ளோ உம்னா மூஞ்சி ,
ஆனா அப்படி பேசாததே எனக்கு நிறைய பலத்தையும்
மரியாதையையும்
தேடிக் கொடுத்திச்சு அதனால வெட்டியா பேசாதிங்க அப்புறம் ஸ்கூல் பசங்க
மாதிரி பதிவு எழுதாதிங்க

அப்புறம் சமிபகாலமா ஒரு 6 00 பேரை அன்ப்ரன்ட் பன்னிருக்கேன் ஒரு 80 பேரை
ப்ளாக் பன்னிருக்கேன் காரணம் பெரிசா இல்லை தன்னை அப்பாடக்கரா
நினைச்சவங்களும் வெட்டியா இருந்தவங்களும்தான் அவுங்கள்லாம்

இறுதியா எனக்கு முகப்புத்தகம் நூலகமா இருக்கு நிறைய முகங்களையும்
புத்தகங்களையும்
படிக்கிறேன்

கொஞ்சமல்ல நிறைவாய் நிறையவே நட்பாய் உறவாய் கிடைச்சிருக்காங்க அவ்ளோ
நல்லவங்க நான் என்ன பன்னாலும் நேசிக்கிறாங்க ரசிக்கிறாங்க நான்
இப்படித்தானென்று அவர்களுக்கு புரிந்தது பெரிய சாதனை வீட்லையே மன்டைய
பிச்சுக்கிறாய்ங்க பராவல்ல மக்கா சகமனிதனா நண்பனா ஏத்துக்கிட்டதுக்கு
நன்றி

ஆமா எதுக்கு இதை எழுதினேன் மறந்து போச்சு  தெரியலை.

 இந்த மூஞ்சி புத்தகத்தின்  குப்பை பக்கத்தை பற்றிய பதிவை தனியா எழுதுறேன்
மீன்டும் வரும் மூஞ்சி....

கொடு, கேள், கொடுத்து கேட்காதே




தேடலொன்றை
மறைத்து
புன்னகை
கொடுத்து
தேவையோடு
காத்திருக்கிறிர்கள்,

ஆறாம் அறிவின்
அறிவென்று இதைத்தான்
சொல்லி ஏமாற்றுகிறிர்கள்

வேட்டையாடும்
விலங்கும் ஏன் !
சிறு சிறு பூச்சுகளை தேவை தென்பட்டதும்
தேடலை மறைக்காது நேரடித் தாக்குதலில்,

நீயோ மனிதனென்ற
பெயரோடு
அறிவென்னும்
முகமூடியோடு
ஆதாயம் தேடி இழக்கிறாய்
கொடுக்கிறாய் தேடுகிறாய்
நீயும் விலங்கென்பதை மறைத்து

உரிமையோடு கொடு, கேள், கொடுத்து கேட்காதே.

வாழ்க்கை.!




காலைகளில்
உனக்காக
வரவேற்றிடும்
முகம்
தேடாதே,
இன்னும்
நீ குழந்தையல்ல
கொஞ்சி கெஞ்சி
உன்னை வாறி தோளில் சாய்த்திட,
விழித்திடு
கழித்திடு
ஓடு ஓடு ஓடிக் கொண்டே இரு,
இங்கு காகிதங்களில்
எண்கள் பதிவுகளுக்கு
நடுவில்
இறந்த புன்னகையாய் !

கைப்பற்று உனக்கும்
புன்னகை வரும்
காகிதம் கண்டே
உன் முகம் பார்த்து
கேட்காமல்
கொடுப்பார்கள்
உன் கையிலிருக்கும்வரை,
இதுதான் இங்கு விதி
இதுதான்
இங்கு நடைமுறை
நீயும் வாழ வேறு
வழியில்லை.

முடியாதென்றால்
முடித்துக் கொள்
உறவுகளை
உலகை
மரணம் மட்டுமே
முடிவல்ல....

நட நடந்துக் கொண்டே இரு,
எதையும்
தீர்மானிக்காது
நட
நதியைப் போல்
மேகங்கள் போல்
காற்றைப் போல்
நகர்ந்து கொண்டே பயணமாய்


கிடைத்ததை தின்று
கிடப்பதில்
தூங்கு
உலகம் உன்னை பைத்தியமாய்
பார்க்கட்டும்

நீயோ மகிழ்ந்திருப்பாய்
இயற்கையே
உன்னை
ரசித்திருக்கும்
அதுதான் வாழ்க்கை வாழ்ந்து போ .

Tuesday 5 March 2013

என்னமோ போங்க...!




ஒரு மாலையில்
பூக்களை
ரசிக்க
எண்ணம் கொண்டு பூங்கா நுலைகிறேன்

பகலை புணர்ந்து
ஒய்விற்காக
தன்னையே இழந்து வேர்பார்த்து சாய்ந்துக்
ஏங்குகிறது
விடுதலை வேண்டி

இன்னும் காலம்
இருப்பதாய்
இழுத்துப் பிடித்தப்படி காம்புகள்

நாளைய பகலுக்காக
தன்னை வெடித்துச் சிதற தயாராகிக்கொண்டும்
உதிரப் போகும்
பூக்களை பார்த்து
நகைத்துக் கொண்டும்
மொட்டுக்கள்

இன்று நான் நாளை நீயென்று
உதிர்ந்தது ஒவ்வொரு பூவும்

நானோ வேர்களிடம் சொல்லி வைத்தேன்
இனி பூக்காதே
இங்கு கண்களெல்லாம் புணர்ந்து செல்கின்றன
உன் வேர்களை நீயே கொன்று விடு
இனி இங்கு பூக்களுக்கு வேலையில்லை.

முடிவொன்றும் முடிவல்ல இன்னோரு முடிவின் தொடக்கம்



நான் எடுக்கும்
முடிவுகளை
நானே மீறித் தொலைகிறேன்

எனக்கான வாக்குறிதிகளை
நானே காப்பாற்ற
தவறுகிறேன்,
யாரோ ஒருவன்
கேட்டுக் கொண்டிருந்த போதும்

இனியும் அவனை ஏமாற்றப் போவதில்லை,
ஒவ்வொருமுறையும்
தவழும் குழந்தையாய்
விழுந்தெழகிறேன்
நானே கைதட்டி
சிரித்தே என்னை குழந்தையாய் பாவித்தே பல
பாவங்கள் சொய்தவன்னமே
காலங்களை என்னை அவர்களை
ஏமாற்றிக் கொண்டே
மீன்டும் முடிவொன்றெடுக்கிறேன்
முடியாத முடிவொன்றிலிருந்தே

இதோ மீன்டும் ஒரு முடிவு
முடிவற்றுப் போக எத்தனிக்கிறது
இதை வென்றிடவே
எடுக்கப்பட்டது
இன்னோரு முடிவு

முடிவொன்றும் முடிவல்ல
இன்னோரு முடிவின் தொடக்கம்.

Saturday 2 March 2013

அரபு நாடுகளில் ஆடைச் சிறைக்குள் அவள் ஆணின் எண்ணம் கலைப்பாளாம் பெண் உன்மையெனில் ஆண் பேசும் நாயினமா !



முதல் விபத்தில் 
சரி செய்யப்படாத சாலையாய் சட்டதிட்டங்கள் 
உயிர்கள் விதைக்கபட வேண்டிய கட்டாயத்தில்
இந்தியனின்
வருங்கால வாழ்க்கை பாதை.


எழவு விழாத
வீட்டினரின்
இழப்பின்
வலியாய் சாலை விபத்தை 
கண்டு கடந்து
செல்கையில்
மனதில் கொடுக்கும் மெளனம் மட்டுமே 
இந்நாட்டின் இயல்பு.



தினமும் பார்க்கிறேன் இரவில் இதே
நேரத்தில் வேலை சென்று திரும்பும் அவளை 
அழைத்து செல்கிறாள் அன்னை
பெண் மிதான நம்பிக்கையும்
பெண்ணுக்கான சுதந்திரமும்
இங்கு இல்லையென்று 
சொல்லாமல் சொல்லி செல்கின்றனர் அவர்கள்.
இயற்கையை 
கழுத்தறுக்க
யோசிக்காத
நாம்தான்
இயற்கை முரணை பாதுகாக்கிறோம்
களையெடுக்காமல் பாதுகாப்பதும்
குற்றமே 
நாளை நம் வீட்டிலும் வளர்ந்திடும்
பயமின்றியே 
பயிர் திண்ணும் பெருச்சாலிகளாய்
தண்டனைகள்
நிறைவேற்றப் படாதிருப்பதுதான்
மிகப்பெரிய குற்றம்
ஆம் நாம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

கண்ணால் காணும் சக உயிரை 
சதையாய் எண்ணி புணரும்வரை
மனிதனென்றும்
மனிதமென்றோ சொல்ல வெட்கபடுவோம் 

விலங்குகளுக்கு கூட காலம் நேரமுண்டு 
எல்லாவற்றிர்க்கும்.


அரபு நாடுகளில் 

ஆடைச் சிறைக்குள் அவள்
ஆணின் எண்ணம் கலைப்பாளாம் பெண் 
உன்மையெனில் ஆண் பேசும் நாயினமா !


சிறகு கொடுப்பதாய்
சொல்லி இறகை பறித்து
பாதுகாக்கிறோம் நானும் யோக்கியனில்லை அவளுக்கு.


என் பாதையில் அவள் நடக்க வேண்டுமென
அப்பனோ அண்ணனோ நண்பனோ காதலனோ கணவோனோ
நினைக்கும் வரை ஆணென்பவன் விலங்கினமதான்.



வெறும் வேடிக்கை 
பார்க்கும் பொம்மைகளாய் இனி பிறக்கும்
குழந்தைகள் கையில் கொடுத்திடுங்கள் 
உங்கள் கடவுள் பொம்மைகளை 
உடையும் போதேனும் உணரட்டும் 
உணர்வற்றவன் 
கடவுளென்று.


என்னை ஒத்திருந்த முகமூடியணிந்த
மிருகமொன்று
நான் வேடிக்கை பார்க்க
சக உயிரின் சதையறுத்து
திண்கிறது
இனி இந்த காட்டிற்கு 
விலங்கையோ இறைகளையோ 
குழந்தை வடிவில் வளர்க்காது 
கருவில் அழித்திடல் நன்று .



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...