Saturday 8 September 2012

உன்போல் நேசிக்க யாருமில்லையென்கிறாய நான் நேசிக்க உன்போல் யாருமில்லையென்று தெரியாமல்..!


உன்போல் நேசிக்க யாருமில்லையென்கிறாய
நான் நேசிக்க உன்போல் யாருமில்லையென்று தெரியாமல்..! 

தறிகெட்டுத் திறியும்
பார்வைகளை
உச்சிமுடி பிடித்திழுத்து
பிழை திருத்துகிறாய்
உதட்டால்..!



படிய வாறிய ஒற்றைச் ஜடை பின்னலுக்குள்
நீயும் நானும்..!




இடைக்கால
பிரிவைப்போல்
ஓர் நெருக்கம் நிஜத்திலும் இருந்ததில்லை...



துளியளவு
குரல் கேட்க
கடலளவு
காதல் கேட்கும்

ராட்சஷி நீ..!

காயபடுத்தி சிரித்த அத்தனை
முகங்களும்
பார்த்து சிரிக்கின்றன
உன் பிரிவில்..!



பிரிவின் முற்றுப்புள்ளி
தேடித்தேடி
காத்திருப்புகள்
தொடர்கதையாய்...


கொடுப்பாய்
கொடுக்க சொல்வாய்
காதலோ முத்தமோ
நானென்ன வேடிக்கை பொருளா உனக்கேன்றால்
என்னை உடைக்காது
பாதுகாக்கும்
விளையாட்டு
பொருளென்கிறாய்..!



நாளை 
எனக்கு பிறந்த நாளென்கிறாய்
அதனாலென்ன இன்றுபோல் நாளையும் கொண்டாடுவேன் உன்னையே..!


ஏற்றப்படா மெழுகாயிருந்தும்
உருகி தொலைகிறது
நாட்கள் காத்திருப்பில் கண்ணீராய்...

காதல்!!!..


சரி செய்யப்படாத
சட்டைகாலர் மடிப்பும் பூட்டப்படாத
முதல் பட்டனும்
உன் வருகைக்காக..!



கிழிக்க மறந்த
தேதிகளில்
சேமிக்கபடுகிறது
உறவுகளுக்கான
காத்திருப்பின் காதலோ
அன்போ...


நெடுநேர அமைதியை
கலைத்து
உணர்த்தியது
இமையொற
ஈரத்துளி
நான் யாரென்று...!.                           .joe.!

1 comment:

thendralsaravanan said...

சும்மா கலக்குறீங்கப்பா.......எப்படி இப்படி ஒரு பிரவாகம்!என்னமோ போங்க!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...