♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நன்றி என்னும்
வார்த்தையில்
தீராதது என் நான்.
அவளென்று
அவனென்று
ஒன்று
இல்லவே இல்லை
அம்மா என்னும் வார்த்தை ஒன்றேயென்று எண்னுகையில்.
கேள்விகளின்றி
தொடங்கி
கேள்விகளின்றியே முடியும் அன்பு.
#♥
ராட்டினம் போல் சுற்றும்
பொம்மையை
வேடிக்கை
பார்க்கும்
தொட்டில் குழந்தையாய்
அவர்களின்
சிரிப்புச் சத்தத்தை கேட்கும் நான்.
#♥
தொட்டில்
துணியாகிப்
போகிறது
சிலரின் நட்பு
அம்மாவின் வாசமாய்.
#♥
அம்மாவிடம் புடவை நூல் வாங்கி
தீப்பெட்டியில்
பேசி சிரிக்கிறோம் அன்பில் நாம்.
#♥
ஒரு முத்தம்
கொடுக்கும்
ஈர்ப்பை
நேசத்தை
சிறு மெளனம்
கொடுத்திடும்
இதயத்திற்கு
மெளனம் என்றும்
கலையாத பேச்சு அழியாத குரல்.
#♥
No comments:
Post a Comment