உன்னை முத்தமிட்ட
மழை
வானென்னும் போர்வைக்குள்
ஜீரத்தில்
நடுங்கிகொண்டு
தென்றலாய் காற்று நான் போர்த்திக்கொள்ள..
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
தாயின்
விழிப்புக்கு முன் விழித்த குழந்தையின்
சீன்டாலாய்
உன் நினைவின் தீன்டல் கனவில்..!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
விழித்ததும் வீடெங்கும்
தேடி
வாசலில்
காத்திருந்து
இருளுக்குள்
ஒழியதொடங்குது
ஒர் விடியல் நீயின்றி..
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
தோழியின் திருமணத்திற்க்கு செல்கிறேன்றால்
என்னையும் அழைத்து செல்லென்றால்
முடியாதென மறுத்து
தாலி ஒன்னுதான்
இருக்குமென சிரிக்கிறாள் :..
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
பழக்கமில்லா
வீதிகளில் கைபிடித்து
அழைத்து செல்கிறாய்
பழகிகொண்டேன் உன் கைகளை
எப்போதும் கைவிடக்கூடாதென்று..:
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
காதல் மொழியாய் ஊடலை தேந்த்தெடுக்கிறோம்
கவிதை தேடலாய்...!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
ஊடலில்
இசை ஸ்வரங்களாய்
மாற்றி மாற்றி
சொல்லப்படும்
போடா போடி கண்டு காதல்
கைதட்டி சிரிக்கும்
சிரிப்பு சப்தத்தை மொழி பெயர்க்க
வார்த்தை தேடியே இரவுகள்
பகலாகிறது ...
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
கேட்பாரற்ற பாடலாய்
கவணிப்பாரற்ற
கவிதையாய்
மன்னிப்பு இல்லா பாவாமாய்
யார் தேட முதலிலென்ற பிடிவாத காத்திருப்புகளால் பாவமாய் காதல்.!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
மெளனத்தில்
மெளனம்
தேடி பெருங்குரலாய அலைகிறது
ஒரு வார்த்தை
பிரிவு//..!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
இலையில் தங்கி
பிரிவுக்காக காத்திருக்கும்
பனித்துளியாய்
ஒருதலைகாதல்..!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
நீ
இன்னும் இன்னும் என்னை விலகிச்செல்
நான்
இன்னும் இன்னும் உன்னை நெருங்க..!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
அவள்மீதான
தேடலை
தொலைக்க
இடம் இன்றி
இன்றும் இல்லாமல் போனதெனக்கு..
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
ம் கொட்டலுக்கான
காத்திருப்பில்
உதடுகள் மட்டுமே
இதயம் பேசிக்கொண்டுதான் எப்போதும்..!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
இல்லையில் இறுகிவிடும்
உண்டில் உருகிவிடும்
வேண்டாமில் மட்டும்
வேண்டுமென கெஞ்சும் காதல்!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
முடிவுக்கு வராத வாக்குவாதங்களுக்கு
முத்தங்களே முற்றுப்புள்ளியாய் காதலில்.
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
அழைப்பை துண்டிக்குமுன்
நீ கொடுக்கும்
மெளனம்
எனக்கான
காதல் காவியம்..!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
உன்னுடன்
காதலில் கற்பனையில் எண்பது வயதுவரை வாழ்ந்துவிட்டவனிடம் அழகைபற்றி புலம்பும் செல்லகிறுக்கி நீ
உள்ளுக்குள் சிரித்து
முகத்தில் வெறுமை காட்டும் தலையாட்டி பொம்மை நான்..:-)
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ joe.!
3 comments:
//முடிவுக்கு வராத வாக்குவாதங்களுக்கு
முத்தங்களே முற்றுப்புள்ளியாய் காதலில்.//
ஊடலுக்குப் பின் கூடல்
nice
உங்கள் கவிதைக்கேற்ப அழகிய படத்தேர்வு !அருமை அருமை....!
மெளனத்தில்
மெளனம்
தேடி பெருங்குரலாய அலைகிறது
ஒரு வார்த்தை
பிரிவு//..!hmmm nice line joe :)
Post a Comment