முதுகில் அமர்ந்து தட்டியும் தடவியும்
இஷ்டத்துக்கு முடியை இழுத்தும்
எழுப்புவாய் வலித்தாலும்
உள்ளுக்குள் கொண்டாடி
முகத்தில் உறக்கம் காட்டுவேன்
இன்னும் அடிக்க இன்னும் இழுக்க
உச்சகட்டமாய்
உன்னால் முடிந்த எல்லாம் செய்வாய்
உன் தேவை சில கொஞ்சல்களும்
பல முத்தங்களும்தான்...
நடு வீட்டில் இரகசியங்கள்
பேசிக்கொள்வோம்
மொத்தமாய் எல்லோரிடமும்
என்னை பழியாடாக்குவாய் 5 ரூயாய்
சாக்லேட்டிற்க்க்கு அந்தகணம்
உன் முகத்தின் உணர்வை பதிவிட வார்த்தை ஏது..
உலகின்
ஈடு இனையில்லாதது
உன் எச்சில் முத்தம்தான்..
தேவைகளை என்னிடமும்
குறைகளை
அவளிடமும்
சொல்கிறாய்
தாய்மாமன்
தாய்க்கு சமமென்று யார்சொல்லி தெரியும் உனக்கு...!
விடுமுறை நாட்களுக்காக
வாசலில்
காத்திருக்கிறது
தனிமையில்
கலப்பில்லா காலணிகள்...
1 comment:
அருமைப்பா.........!மூன்று தாய் மாமன்கள் இருந்தும் எங்களுக்கு கிடைக்காத அன்பு!
Post a Comment