Wednesday 19 September 2012

உற்றுப் பார்க்கிறாள் உற்றுப் பார்த்த பாவைகளின் முகங்கள் எத்தனை என்று எண்ணிப் பார்க்க...!!!

அன்றோருநாள் அலைபேசியில் 
சொல்லுடி என்றாயே
அன்றுதான் உறுதி செய்யபட்டது 
என்னில் காதல்...!


முதல் சந்திப்பில் 
அங்காடியில் பொருட்களை 
மட்டுமே பார்க்கும் சிறவனாய்
நான் 
எதை கொடுத்து
எதை மறுக்க யோசிக்கும் சிறுமியாய் நீ...



வேடிக்கை
பொருள் நீ
விளையாட்டுப் பொருள்
நான்
ஒவ்வோரு சந்திப்பும்..!



உன் 
அருகாமையில்
முழுமையாய்
தொலைகிறது
நான்..!


உற்றுப் பார்க்கிறாள் 
உற்றுப் பார்த்த பாவைகளின்
முகங்கள் எத்தனை
என்று எண்ணிப் பார்க்க...


தனித்தனியே பயிராகி 
சமையலறையில் ஒன்றுகூடி 
உணவில் 
கலந்திடும் காய்கறிதான் 
உனக்குமெனக்குமான கருத்து வேறுபாடு 
நறுக்காமல் இனைக்கிறோம் 
உதடுகளை...!


எண்ணிக்கையில்லா கேள்விகளோடு
எனை நெருங்குவாய்
அத்தனைக்கும் சிரிப்பையே 
பதிலாய் தருவேன் 
கோபத்தின் உச்சத்தில் 
சில கொட்டுக்களும் கிள்ளலும் பரிசளிப்பாய் 
பிரியும்கணம் அடுத்த 
சந்திப்பைபற்றி கேள்வி கேட்காமலிருக்க....


இருளை மூட போர்வையாய் காதல் வேண்டும்
உன் அருகாமை தேடி அலைகிறது என் தைரியங்கள்..!



ஒழிந்துகொள் தேடுகிறேன்
அகப்படக்கூடும்
அழகான ஓர் வார்த்தை கவிதையாய்..!!!

2 comments:

thendralsaravanan said...

ம்ம்ம்.........அழகான காதல்!

Veerarajan said...

Athanaiyum arumai....arumai...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...