தாஜ்மஹாலில் நடப்பதாய்
சொல்கிறாய்கொழுசின் எதிரொலி செவிசேர்ந்தது தெரியாமல்..♥
அலைபேசியில
ஓரிருவார்த்தை தாண்டமுடியா
நிலையில்
நான் தவித்த தவிப்புகளை
உன் தவிப்புகள்
அறிமுகமில்லா
முகமாய் பார்த்தது என்னில்..♥
முத்தம் கேட்டால்
சத்தம்
கேட்குமென்கிறாள்... ♥
என்னை சிறையெடுத்த
இமைக் கம்பிகளை
எண்ணிச்சொல் சிறையெடுக்க...♥
யார் நீயென கேட்கிறாய்
கேட்டுக்கொள்
சமாளிக்கிறாய்
நீ சொல்லிய
காரணங்களில்
பிடித்தது
ஒன்று மட்டுமே
காலம் முழுவதும் உன்னோடுதான்
அடுக்கும்
உதடுகள் நாளை செவியில் இருந்து திரும்பபெறாமல்
உதடுகளை மெளனமாக்கும்...♥
தெரிந்தே
கேட்கிறாய்
எவ்ளோ பிடிக்குமென
உனக்காக
நானிருக்கவும்
நீ நீயாக இருக்கவும்
எனக்கு பிடிக்கும்...♥
காத்திருப்புக்கள்
காத்திருக்கின்றன
உனை
பிரியும்
கணத்திற்க்காக..♥
காற்றில் காற்றோடு கலந்து
சாரையாய்
ஊர்ந்து உன் வாசம் தேடி
அலைகிறது
மழையும் இல்லை வெயிலும்
மேகங்கள்
உருகி உதிர்வதற்குள்
போர்வைக்குள் புகுந்திட இனை தேடும்
காதலாய் காலை..♥
காத்திருப்பின்
சோம்பலில்
மூலையில்
முடங்கி கிடந்த
இதயம்
சோம்பல் முறித்து
திமிரி சிரித்தது
அவள் நெருங்க
தொடங்குகிறாள்..♥
உன்னிடமும்
என்னிடமும்
விடுதலைக்காக
காத்திருக்கும்
இந்நாள்
உன் அழைப்பில் மட்டுமே
சிறைக்கதவை உடைத்து
பறக்கும்
சிறகின்றி...♥
காத்திருப்புகளை
பிசைந்து
பொம்மை செய்து
பிள்ளையாய்
உடைத்தழுகிறேன்
பூட்டப்பட்ட வாசலில் காத்திருக்கும்
சிறுவனாய்....♥♥♥
1 comment:
//காரணங்கள் சொல்லியே
சமாளிக்கிறாய்
நீ சொல்லிய
காரணங்களில்
பிடித்தது
ஒன்று மட்டுமே
காலம் முழுவதும் உன்னோடுதான்
காத்திரு..//
//தெரிந்தே
கேட்கிறாய்
எவ்ளோ பிடிக்குமென
உனக்காக
நானிருக்கவும்
நீ நீயாக இருக்கவும்
எனக்கு பிடிக்கும்...♥//
என்னை மீண்டுமொருமுறை படிக்கத் தூண்டிய வரிகள் இவை..
:-)
Post a Comment