Tuesday 16 October 2012

இயர்கையை காப்போம் இயற்கையோடு இயற்கையாய் வாழ்வோம்.. !!!



மரங்களை
வெட்டி வெறுமையாக்கி
வெட்டிய
மரங்களை கதவாக்கி
மீதமானதில்
சவப்பெட்டி
செய்து
அதிலும் 
மீதமானதை 
ஏழைக்கு எரிக்க விற்று
காற்றை தொலைத்தான்..
காலிமனை
கண்ணை உறுத்த
கடனை உடனே
வாங்கி
கல்லை அடுக்கி
சன்னல் வைச்சி
கண்ணாடி போட்டு மூடி வைச்சான்
மரம் எண்ணியது
உயர்ரக
சவப்பெட்டிகளென.



மரங்களை வெட்டிவிட்டு 
கற்களை நட்டு வைத்தோம்...
அவரவர் வசதிக்கேற்ப 
கற்கள் வளர்ந்து நின்றன.....
மரம் தெலைத்தோம்

மழை தொலைந்தது,
விளை  நிலங்களை  கூறு பொட்டு
வீட்டுமனையென கூவிக் கூவி விற்றோம்.....
இன்று குடிக்க நீரின்றி தவிக்கிறோம்,
நாளை உணவின்றி தவிப்போம்,
வரும்ஏதோ ஓர்நாள் சுவாசிக்க காற்று இன்றி தவிப்போம் 
அப்பொதும் அசைவற்றே நிற்கும் நாம் நட்டுவைத்த கற்கள்.....





இரக்கமில்லாமல் இருகிப்பொன இதயங்களொடு... 
இடைவேளி இல்லா வீடுகளுக்கு மத்தியில்...
மழைக்கு ஒதுங்க சிறு தாவாரம் இல்லை
வெயிளுக்கு இளைப்பார சிறு தின்னை இல்லை
சுற்றமும் இல்லை நட்பும் இல்லை......
இன்றைய மனிதன் வாழ வீடு கட்டவில்லை 
காசு வசூலிக்க கம்பிகள் இல்லா சிறைக்கூண்டுகள் கட்டுகிறான்.....
இயற்கையை அழீத்து எந்திரமாய் வாழும் இவர்களை என்ன செய்வது ?


இப்டி ஒரே இடத்தில் கட்டினா பூகம்பம் வராம என்ன செய்யும்....

வீட்டுக்கு இரண்டு மரம் வளர்ப்போம் இயற்கையை பாதுகாப்போம்.....


அரசாங்கமே வீட்டுமனைக்கு இரண்டு மரம் வளர்த்தால் மட்டுமே வீடுகட்ட அனுமதி என்ற சட்டம் போடு,இருக்கும் வீடுகளில் மரம் வளர்தால் வீட்டுவரி குறைத்திடு,வளர்க்காத வீடுகளுக்கு வருடத்துக்கு ஒரு தொகை தன்டனையாய் வசூலித்திடு... 

இயர்கையை காப்போம் இயற்கையோடு இயற்கையாய் வாழ்வோம்.









2 comments:

thendralsaravanan said...

கல்லை அடுக்கி
சன்னல் வைச்சி
கண்ணாடி போட்டு மூடி வைச்சான்
மரம் எண்ணியது
உயர்ரக
சவப்பெட்டிகளென....சரியான சாட்டை!

thendralsaravanan said...
This comment has been removed by the author.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...