Sunday 2 December 2012

பிரிவினைவாதம்.


இறந்தவர்களை 
உறவாடி 
சாதியெனக்
கொண்டாடி
சாக்கடைபுழுக்களாய்  நெளிந்து இன்றுவரை
ஆன்மாக்களுக்கு
அமைதிகொடுக்காத நீங்களா அன்பை பயிரிட்டு
அமைதியை அருவடை 
செய்யப் போகிறிர்கள்.


மொழி இனம் மதம் சாதி அன்பு நட்பு துரோகம் இழப்பு இயலாமை
எதிர்பார்ப்பு 
ஏமாற்றம் உலகின் அத்தனை பிரிவினைவாதமும் இல்லா வீடாய் அமைதியாய் 
அந்த தோட்டம் கடக்கும் போதெல்லாம்
அழுகுரலொன்று 
கேட்கும் 
நானின்றி அமைதி தொலைத்த என் இடத்திலிருந்து .



சிற்பமாய் செதுக்கப்பட்டு
வரலாற்றை 
தொலைத்து
சாதி உணர்வோடு
உடைந்து
உயிர் குடிக்க 
ஒவ்வொரு ஊர்களிலும் 
காத்திருக்கிறது
ஒரு கற்ச்சிலை.



பிறர் மீதான கேள்விகள் மட்டுமே எல்லோரிடமும்
தனக்கான 
கேள்விகளென்று
அறியாமல்.



மாண்ட உயிர்களுக்கு
துனை நிற்கா உங்கள் கடவுள் 
நானே ஆண்டவென அழிப்பவர்களை அழிக்கா உங்கள் கடவுள் 

வருவாதாய் 
சொன்னவனும்
வரவில்லை
எழுவதாய்சொன்னவனும்
எழவில்லை
காப்பதாய்சொன்னவனும்
காக்கவில்லை
கொலைகார அரக்கர்களுக்கு
மனித உயிரைப் பற்றி சொல்லாத கடவுளைதான்
இன்னும் உலகம் வணங்குகிறது
வணங்குபவனை மட்டுமே காப்பானெனில்
அவன் கடவுளெ அல்ல சுய நலவாதி
மனிதனை விட தரக்குவறைவானவன்.

2 comments:

இந்திரா said...

//பிறர் மீதான கேள்விகள் மட்டுமே எல்லோரிடமும்
தனக்கான
கேள்விகளென்று
அறியாமல்.//


உண்மை
ஆனா இது பெரும்பாலும் நிறைய பேருக்கு புரிய மாட்டீங்குது.
கேள்வி கேட்டு கொல்றாங்கப்பா..

ஹேமா said...

கடவுளைத் திட்டினதுக்கு பெரிய ஒரு நன்றி ஜோ !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...