Wednesday 17 April 2013

என் பார்வையில் காதல்!!! ♥



என் பார்வையில் காதல்!!! ♥

காதல் இந்த வார்த்தையில்
ஏதோ ஒரு மாயை சூன்யம் உருவாக்கி வைத்திருக்கிறது இந்த உலகமும் இந்த சமுதாயமும்

கற்பனையில் கொண்டாடி தீர்த்து நிஜத்தில் அதற்கு நேர்மாறான
செயல்களோடு போராடி, தின்டாடி அதிகமாய் அப்படித்தான் பழக்கி இருக்கிறார்கள்
நேற்று காதலித்தவர்கள்
இன்று காதலிப்பவர்களை.

ஏற்றுக் கொள்ளும் வரை கெஞ்சுதலாய்
ஏற்றுக் கொண்டபின்
கெஞ்ச வைத்தலாய்தான்
இங்கு நிறைய காதல்கள்
நானா நீயா என்று
போட்டிப் போடுவதே காதலாய்

ஒரு உயிரை ஜெயிக்க முடியாதற்காக
தோற்றதற்காக
தினம் ஒரு மரணம் ஒரு கொலையோ தற்கொலையோ காதல் பெயரில் நிச்சயமாய் இங்கு நடக்கிறது
பிறப்பின் அர்த்ந்தை கெடுத்து

எல்லா உறவுகளையும் உயர்ந்ததாய் எண்ணிக் கொள்ள சொல்லிருந்தார்கள்
இல்லாவிடில் காதலில்லை என்றார்கள்

இழப்புகளை ஏற்றுக் கொள்ளாது
இந்த நிலையில் வாழ்தல் சுகமென்ற போதை எல்லோருக்கும் ஊட்டப்படுகிறது

ஏற்காவிடில் மாய்த்துக் கொல் இல்லை ஏற்காத உயிரை கொல்
ஏற்றபின் பிரிந்தாலும் இதையே செய் உனக்கு ஆணியம் பெண்ணிய ஆணியில் உருவப்படமிட்டு மாலையிடுவர்
என்பது போல் தவறுகளை கொளரவிக்கும் முட்டாள் சமுகமாய்

இப்போதெல்லாம் காதல் காதலாய் இல்லை
காமத்தின் வடிகாலாய் மட்டுமே
அதிகமாய்

ஆணோ பெண்ணோ பதின் முன்று வயதில் என்ன இதுவென்று ஆராயத் தொடங்கும் உணர்வுதான் இந்த காதல்
யாரோ இருவர் எங்கோ தெருமுனையி சிரித்து பேசுவதை கடந்து செல்கையில் நாமும் வாழ்ந்துப் பார்க்க தொன்றும் உணர்வை

ஏனோ பெரிதான
தடைகளிட்டு சுவாரஸ்மாக்கி அதையே பெரும் போராட்டமாக்கி
அவர்களை வீரர்களாக்கி வேடிக்கை பார்கிறோம்.

காதலென்பது அபரிதமான புரிதலும்
அதிதமான அன்புமென்று
யாரும் சொல்லித்தரவில்லை யாருக்கும்

சில பல வேடிக்கைகள் வாடிக்கையாக பேசாவிட்டால் கத்தி எடுப்பதும் காயபடுத்துவதும் புனிதமென சித்தரித்திருக்கிறது உலகம்
காதலுக்காக தன்னை இத்தனை வருத்திக்கிறாங்களே என்ற பெருமை வேறு
நிச்சயமாக இது மொத்தமும் உள் நோக்கம் நினைச்சதை சாதிக்க நினைக்கும் குருறப்புத்தி குறுக்குப் புத்தி
அவ்ளோதான்
தான் நினைத்ததை சாதிக்க எதையும் செய்யும் விலங்கினப் புத்திதான் மனிதனின் இந்த செயல்கள்

இதெல்லாம் காதலில்லை தன்னை காயபடுத்துதல்
வருத்திக் கொள்தல் எல்லாமே நான் சொல்வதை நீ கேட்க வேண்டும்
செய்ய வேண்டுமென அடிமையாக்க எடுக்கும் முயற்ச்சிகள் அவ்வளவே

எல்லா உறவுகளிலும் உண்டு இழப்புகள் பிரிவு வலி துரோகம் சந்தோசம் மகிழ்ச்சி எல்லாவற்றையும் கடந்து போகும் மானுடம் காதலில் மட்டும் எல்லாவற்றையும் பெரிதாய் மதிப்பளிப்பதன் அர்த்தம் அடிமைத்தனமும்
அடிமையாக்குதலும்தான்

சொல்லப் போனால் எல்லோரும் தனித்தனியென்று யோசித்திருக்கும் மனித இனம் காதலில் இருவர் ஒன்றாய் யோசிக்க வாழ நினைக்க நிர்பந்திக்கிறது இது உச்சக்கட்ட முட்டாள்தனம்தானே,
சிறைபடுதல் சுகமென்றும்
விட்டுக் கொடுத்தலே காதலென்றும் சொல்லிக் கொண்டு வாழ்வை வாழாது யாரையோ சுமந்து யாருக்காகவோ யாராகவோ வாழ்கிறது மானுடம் இதற்கு யாரோ ஒருவர் இறப்பதே மேல் ஆம் யாரின் வாழ்க்கையோ வாழ்வதற்கு அவனோ அவளோ எதற்கு அவனோ அவளோ யாரோ ஒருவர் போதும்தானே
சுயம் தொலைத்து வாழ !

காதலின் துரோகங்கள் பெரிதாய் சொல்லப்படுகிறது இங்கு ஆண்கள் வெளியே சொல்லிடுறாங்க பெண்கள் சொல்றதில்லலை
ஏன்னா பெண்கள் காதலை சொல்லவும் இங்கு தடைதான்
ஒரு ஆண் நான் காதலிக்கிறேனென்று உலகில் வீட்டில் எங்கேயும் சொல்ல முடியும்
ஆனால் பெண் சொல்ல முடியாது
அப்புறம் ஏன் ஆண் பெண்ணை காதலிக்கிறான் ?!

எனக்கு புரியலை உன்னை காதலிச்சு வேற யாரையோ கல்யாணம் பன்னா தப்புன்னு சொல்றிங்களே

இது எந்த விதத்தில் நியாயம் நெருங்கும் பொதுதான் எல்லோரின் தேவை குணம் சுயம் எல்லாமே தெரியும் அப்படி எதேனும் பிடிக்காதபட்சத்தில் அவரவர் வாழ்வை தீர்மானிக்கிற அதிகாரத்தை தப்புன்னு சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது

விருப்பு வெறுப்பு தேவை எல்லாமே வேறாகத்தான் இருக்கும் எல்லோருக்கும்
இதை மாற்றியோ சகித்தோ வாழ்வதுதான் காதல்னு நினைச்சா நீங்கதான் உலகத்தில் மிகப்பெரிய முட்டாள்

காதலென்பது
உன்மையில் ஒன்றுமே இல்லை எனில் அதன் வடிவத்தை அவரவர் விருப்பதிற்கு மாற்றிக் கொண்டே இருக்காங்க
ஆனா பழியை காதல் மீதும் ஆண் பெண் என்று வர்க்கத்தின் மீதும் திணிக்கிறாங்க

காதல் என்பது உன்மையில் காதலிக்கும் முன்பு இருந்த நிலையிலையே சுதந்திரமா இருத்தலும்
புரிதலும்தான்
காதல்,
சூழ்நிலையோ பிடிக்காமலோ
பிரிந்தாலும்
அவரவர் விருப்பு வெறுப்பென்று ஏற்றுக் கொள்தலே காதல்
அதை விட்டுட்டு அவன் ஏமாத்திட்டான் அவள் ஏமாத்திட்டா இந்த பொண்ணுங்களே இப்படித்தான் இந்த ஆண்களே இப்படித்தான்னு புலம்பாதிர்கள்

உனக்காக அல்ல யாருக்காவும் எந்த உயிரும் பிறக்கவில்லை தனக்கா தனது வாழ்க்கையை வாழவே ஒவ்வ்வெரு உயிரும் .

காதல் செயவீர் அவரவராய் இருந்தே உயிரோ உணர்வோ நேசித்து புரிதலோடு அப்படியே ஏறறுக் கொள்ளுங்கள்
இடம்பெயர்க்காதீர்கள் எதையும்,
அவரவரும் தனி உலகம் அவரவரும் தனி சிந்தனை தனி பாதை வாழ்கை வாழ்வதற்கே வாழுங்கள் எனில் வாழ்தல் இனிது.

காதல் பன்னுங்க காதலா பன்னுங்க வாழ்க்கை நல்லா இருக்கும் :-)

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...