Tuesday 28 May 2013

இன்றே கடைசியென்னும் கணக்கு எல்லோருக்குள்ளும் ஏதோ ஒன்றில் தொடக்கமாக எப்போதும்.




பனிக்காற்று கலந்து மழை
கதகதப்பு தேடும் தேகம்
நெருங்க முடியா தூரத்தில் நீ
ஊடலுக்கான
வார்த்தை தேடி நான். 

                
               ♥

என்னவள் காதல்
எழுதி அழித்து
எழுதி அழித்து
விளையாடும்
சிலேட்டுப் பலகை நான

உறவுகள் 
வரா ஞாயிறு
மகிழ்ச்சிக்கு ஓய்வு..

              ♥

இருளை கண்டால் இரகசிய மொழி எல்லா குரல் வளையத்திலும்
ஏனோ ஊரையே துனைக்கு அழைத்தது 
மழலை மனிதனின் முதல் மொழியில்...


விழித்ததும் தேர்ந்தெடுக்கிறாய் 
இன்றைக்கான முகமூடியை 
இரவே உருவாக்கி வைத்ததாய் 
எண்ணி மாட்டிக் கொண்டாய் 
வீட்டிலும் சாலையிழும் 
அலுவலகத்திலும் 
உன் முகத்தை பார்த்து தினமும் 
யார் யாரோ தொலைவர் 
ஒப்பனையில் 

          

தேவைகளை
கைவிரித்து
குழந்தைகளாய்
அனுப்புகிறோம்
அள்ளி அனைப்பவரின்
கழுத்தை இறுகக் கட்டிக் கொள்(ல்)கிறது இதயம்..
             
           ♥
          
நீ யாரெனக்
யாரேனும்
கேட்டால்
நீயே நினைவில்.








நட்பை தவிர எந்த தகுதியும்
யோசிப்பதில்லை
நட்பு மட்டும்.

          

தினத் தேதி தாள் கிழித்து
திருப்பி பாருங்கள்
வெறுமையா 
இருக்கும் நாளையும்.

            


இன்றே கடைசியென்னும்
கணக்கு 
எல்லோருக்குள்ளும் ஏதோ ஒன்றில் தொடக்கமாக எப்போதும்.



No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...