Tuesday 28 May 2013

நானென்பது எனக்கு ரெம்ப பிடிக்கும் நானென்பது நான் மட்டுமெ நானென்பதால்.




ஒவ்வொரு விலங்கின்
குனமும்
சற்று
முரண்பட்டு
கூடவோ
குறைவாகவோ
எல்லா விலங்கிடமும்
உண்டு
உலகின்
மொத்த விலங்கின்
குணங்களும்
குறைகளின்றி
ஒன்றாய்
மனிதனாய்.

பெண்கள்
தனக்குள்ளும்
ஆண்கள்
தன்னை சுற்றியும்
தேடுகிறார்கள்
எதோ ஒன்றை
எல்லாமுமாய்.

  
தொலைவிலும்
நெருக்கத்திலும்
நான்
நானகத்தான்
இருக்கிறேன்
நெருக்கத்தில்
உங்கள் தேடல்
வேறாக இருப்பின்
உங்கள் ஏமாற்றங்கள்
நானல்ல நீங்களே.

நீங்கள்
தலைவனென்பிர்கள்
சிலை என்பீர்கள்
நாளை ஒருநாள்
காகித குப்பையில்
கிடப்பான்,
சாக்கடையோரம் தலைவனும்
கண்டும் கானாமல் முகம் சுழித்து
மனம் வருந்தி
தலை குனிந்து
தலை திருப்பி
காணாமல் போவிர்கள்.
நான் ஒரு போதும் எவரையும்
தலைவனாய்
எண்ணியதில்லை,
அவர்கள் விரும்பிய
தில்லை தலைவனென்று
நீங்கள் சொல்லியதை 

நீங்கள்தான் சொல்லி கொண்டிர்கள்
கொன்றிர்கள்.
உங்களைப் போலல்ல 
நான் எனக்கு தலைவனென்பவன் சக மனிதன் மட்டுமே.
வித்தியாசமான
போர்க்களமிது
இங்கு
ஆயுதங்களில்லை
சப்தங்களுண்டு
அம்புகாளாய்
மீன்டும் ஒரு வாக்கெடுப்பிற்கு
இலவசமாய்
இருக்கும்
இடத்திலயே
செழுத்தி விடுவோம்
உரிமையை விட்டுக் கொடுத்ததாய் எண்ணி.

இந்த இரவை
என்ன செய்வதென்றே
தெரியவில்லை
வீடொன்றும்
எனக்கு
துனையில்லை
நானும் வாசலில்தான்
இருக்கிறேன்
காவலோ நாயோ
நீங்களே முடிவு
செய்யுங்கள்,
தீருடியவர்களுக்காக
குலைத்தலோ
இழப்பிற்காக
ஒப்பாரி ஓலமோ
ஒரு போதும் என்னிடமில்லை,
எனில் நானென்னும் இதயத்தை எப்போதே திருடிருந்திர்கள் நீங்கள்.

          
ஒருபோதும் ஒப்பிடாதிர்கள்
இவர் இவரைப்
போன்றென்று
எவரும் எவரைப் போன்றன்று
அவரவர் அவரை போன்றே.

நான் சதை தின்னும்
மிருகங்கள்
மத்தியில்தான்
வாழ்கிறேன்
என் முகமும்
மிருகத்தின்
முகமும் ஒன்றாய்தாய்த்தான் இருக்கிறது.
என்னால் ஒருபோதும்
சொல்ல முடியவில்லை
நான் மனிதனென்று
எனில் நான்
மிருகங்கள்
மத்தியில்தான்
வாழ்கிறேன்
என் முகம் போல்தான்
இருந்தது
அந்த சதை தின்னும் மிருகத்திற்கும் முகம்.


பல நாய்களின்
மத்தியில்
சில மனிதர்கள் மட்டுமே
வாழ்கின்றனர். 

எப்படி மூடி மறைத்து
முகமூடிகளோடு
மனதெனென்று
சொன்னாலும்
அவன் விலங்கினம்தான். 

முடிந்தால்
நேற்றைய
தலைவர்களை
கொன்று
விடுங்கள்.
அவர்களால்
இங்கு சாதிப் பிரச்சனைகளாவது
குறைந்து
அவரவர் சாதியில் இன்னோருவன்
எல்லோருக்காகவும்
சாதித்திடப்
பிறக்கட்டும்
நாளைய பொதுவுடமையாளனாய்
முடிந்தால் கொன்று விடுங்கள் நேற்றையத் தலைவர்களை.

யார் யாரோ
நம் கண்களில்
கனவு காண்கிறார்கள்.
எந்த கனவும்
நிறைவேறப் போவதில்லை
என்று தெரிந்தும்.
இன்றேனும்
கனவுகளற்று
உறங்குங்கள்
எனில் எவர்
கண்ட கணவும்
இங்கு நிறைவேறவே
இல்லை
அது காந்தி கண்ட கனவோ
காமராஜர்
கண்ட கனவோ அம்பேத்கார்
கண்ட கனவோ எத்தனை எத்தனையோ  

நல்வர்கள் கண்ட எந்த கனவும்  
இங்கு நிறைவேறவே இல்லை
எனில்
அவர்களைப்பற்றி பேசிக்கொண்டு
நீங்கள் நீங்களாகவே இருக்கிறிர்கள் இன்றேனும்
இனியேனும்
அவர்களை கொண்டு நிறைவேறாத கனவு காணாதீர்கள்
.


நானென்பது
எனக்கு
ரெம்ப பிடிக்கும்
நானென்பது
நான் மட்டுமெ நானென்பதால்.   ♥♥♥.

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...