Tuesday 17 July 2012

உன் பெயர் மட்டும் ஏனோ மழை...!



சில நாட்களாய் நான் உறங்கிய பின் வருகிறாய் என் மீது உனக்கு என்ன கோபம்..


ஒவ்வோருமுறையும் உன் வருகையை கைகள் விரித்து உதடுகளால் முத்தமிட்டு வரவேற்கிறேன் என் உயிரால் கட்டி தழுவுகிறேன்...


நீயோ பகலில் வர மறுக்கிறாய் இரவிலும் வந்த வேகத்தில் வீடு திரும்பி இருக்கிறாய்....

நீ முத்தமிட்டு கோஞ்சி விளையாட பச்சை புள்வெளியும் இல்லை ஒட்டி உறவாட எந்த மரமும் இல்லை என்ற வருத்தமா...

இல்லை உலகம் உன்னை கண்டதும் ஒடி ஒழிவதால் உனக்கு கோபமா மன்னித்து விடு அந்த கற்சுவர் கைதிகளை அவர்கள் திருந்தா விட்டாலும் வருந்தி கொண்டுதான் இருக்கிறார்கள்உனக்காக...

நான் இருக்கிறேன் உன்னை உயீராய் சுவாசிக்க... உறவாய் நேசிக்க...

இன்றும் இரவு வந்து என்னை ஏமாற்றாதே கனவில் வர நீ என் காதலி அல்ல கடைசிவரை என் உயிரில் இருக்கும் உயீர் நீர்
உன் பெயர் மட்டும் ஏனோ மழை...! joe.!

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...