Wednesday 16 January 2013

"மழை"...!!!!





நிலவைத் திருடிக் கொண்டு ஒளியும் இல்லை
துளியும் இல்லையென 
கண்சிமிட்டி 
சிரிக்கிறாள்
மின்னலாய். 

ஓவ்வொரு
இடிச்சத்தமும்
இதயத்தில்
உறவுகளின்
துடிப்பாய் வெடிக்கிறது...

எங்கே விழுந்தாலென்ன
பாதைகள்
தீர்மானிக்கும் நம்பிக்கை என்னில் மழை



உன் நிழல்
குடை பிடிக்க
முடியா அன்பு மழை.


 
நீ வேண்டாமென
நினைக்கும் போதெல்லாம்
நானே வேண்டாமென
நினைக்கிறேன்.

தினமும் உன் நினைவுகளை நடை பாதையெங்கும்
விட்டுச் செல்கிறேன்
நாளைய தனிமை தவிர்க்க.


போ உன் பேச்சு கா
நீ பார்க்க குழந்தையை
கொஞ்சியதை
மனதில் வைத்துக் கொண்டு வரமறுக்கிறாய்
போ உன் பேச்சு கா !




ஒளிந்து கொல்லாதே
உன்னை
என்னால் தேட முடியாது
அத்தனையும்
உதறி தள்ளி வீதி வந்தது உன்னை கொஞ்சி விளையாடத்தான் வா !



ஒருபிள்ளை
வாழும்
வீட்டின்
வெறுமை
நிரம்பி வழிகிறது
உன் வருகையால்.


முற்றுப்புள்ளி
தீர்மானித்து
இயற்கை எழுதும் கடிதம்
நீ .


நாசி தொட்டது
உன்வாசம்
இங்குதான்
அருகில்தான்
இருக்கிறாய்
முத்தமிடப்போகும்
நேரம்
தூரமில்லை.



புன்னகைச்
சத்தம்
நிறம்பிய
தொட்டில்

நீ

கருவறை
ஒன்றென
கொண்டாடும்
புன்னகை

நீ



என் தோள்களின்
பள்ளத்தில்
மழலையாய் நீ.


நீ
ஒதுங்க
தொடங்க ஈசலாய்
நகர்கிறான்
மனிதன்..!




எல்லா வார்த்தையும்
உறங்கட்டுமென
காத்திருக்கிறது உனக்கான ஓர்
வார்த்தை...






  

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...