காலைகளில்
உனக்காக
வரவேற்றிடும்
முகம்
தேடாதே,
இன்னும்
நீ குழந்தையல்ல
கொஞ்சி கெஞ்சி
உன்னை வாறி தோளில் சாய்த்திட,
விழித்திடு
கழித்திடு
ஓடு ஓடு ஓடிக் கொண்டே இரு,
இங்கு காகிதங்களில்
எண்கள் பதிவுகளுக்கு
நடுவில்
இறந்த புன்னகையாய் !
கைப்பற்று உனக்கும்
புன்னகை வரும்
காகிதம் கண்டே
உன் முகம் பார்த்து
கேட்காமல்
கொடுப்பார்கள்
உன் கையிலிருக்கும்வரை,
இதுதான் இங்கு விதி
இதுதான்
இங்கு நடைமுறை
நீயும் வாழ வேறு
வழியில்லை.
முடியாதென்றால்
முடித்துக் கொள்
உறவுகளை
உலகை
மரணம் மட்டுமே
முடிவல்ல....
நட நடந்துக் கொண்டே இரு,
எதையும்
தீர்மானிக்காது
நட
நதியைப் போல்
மேகங்கள் போல்
காற்றைப் போல்
நகர்ந்து கொண்டே பயணமாய்
கிடைத்ததை தின்று
கிடப்பதில்
தூங்கு
உலகம் உன்னை பைத்தியமாய்
பார்க்கட்டும்
நீயோ மகிழ்ந்திருப்பாய்
இயற்கையே
உன்னை
ரசித்திருக்கும்
அதுதான் வாழ்க்கை வாழ்ந்து போ .
No comments:
Post a Comment