Saturday 28 July 2012

"மழை"



உதடுகளை குவிக்க தொடங்கி விட்டாய் முதல் முத்தம் எனக்கா                         
எனைத்தாங்கும் அவளுக்கா.... மழை!!!


இனி உன்னை 
வரவேற்பதாய்
இல்லை
ஒவ்வோரு முறையும்
உதடுகளை குவித்து ஏமாற்றுகிறாய்
மழலையைப்போல் காத்திருந்து
கடைசியில் ஏமாற்றமே மிச்சம்
சத்தங்களும் இல்லை உன் வாசமும் நூகர
முடியவில்லை
உயீர் குளிர்விப்பாய் 
என்றேன்னினேன்
நீ அனலில் தவிக்கவிடுகிறாய்
இனி உன்னை வரவேர்க்கபோவதில்லை
உன் பேச்சு கா...
"மழை"



ஸ்ஸ்ஸ...் 
அமைதி 
அமைதி 
அவர்கள்
முத்தமிடப்போகிறார்கள்
"மழை"


துளி விடு தூது விடுகிறாய் 
நான் இன்னும்
ஒளிந்துகொண்டுதான் இருக்கிறேன்
நாம் பழம் விட்டு கொள்ள நீ இன்னும் பலமாக வா
தூளி முத்தம் போதாது எனக்கு கடலளவு காதலோடு காத்திருக்கிறேன் நான்...
"மழை"


கண்ணாமுச்சி ஆடிக்கொண்டிருந்தோம் சிறுபிள்ளைகளாய்
உன்னை 
விரலால்
தொட்டதற்கு மின்னலாய் சிரித்து கேளி
செய்தாய் 
செல்ல கோபங்கள்
கரைய தொடங்கின
இனி உச்சி முதல் 
பாதம் வரை உன் சொந்தம் உயிரோடு கலந்துவிடு....
"மழை"


போதும் என்றா இல்லை தீர்ந்து விட்டதா 
முத்தங்கள்
அமைதி காக்க தொடங்கினாய் நீ
வீடு செல்ல தொடங்குகிறேன் நான் 
அன்னையவள்
முந்தானையில் ஒற்றி எடுத்துக்கொள்வாள்
அவளுக்கு 
நான் கொடுக்க
மறந்த முத்தங்களேன....
"மழை".......joe.!

2 comments:

joe said...

machi kalakura po all the best mamu

yathavan64@gmail.com said...

அன்பு தமிழ் உறவே!
வணக்கம்!

இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"மழை" யில்

சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!

வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...