Saturday 4 August 2012

love...!


இந்த பிரிவின்
மெளனம்
முத்தத்திற்கான
செமிப்பு கிடங்கா
இல்லை
காத்திருப்பு புதைகுழியா...!

கடைசி சந்திப்பில் நீ கிள்ளிய இடம்
இப்போது வலிக்கிறது
பிடித்திழுத்த உச்சி முடி உதிர காண்கிறேன்
கண்ணிராய்
கரைகிறது காதல்...!


இமைச்சிறகை
பிரிக்காதே
என் வாழ்நாள்
இறகு எல்லாம்
வாழாமல் உதிர்கிறது உன் விழியில் மயங்கி...!


விடியலில்லா இரவு தேடுவேன்
அவள் நினைவில்...
அடுத்த விடியல் வேண்டாமென்ற ஆசையோடு...:!

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...