Wednesday 27 February 2013



உலகின் துன்புறுத்தல் 
தாளாது இருப்பாகவே 
இருக்கும் தனிமையும் சலனமற்றிருக்கும் மெளனமும் 
நினைவுகளை அள்ளி அள்ளி வீசுகின்றன
முகத்தில் 
உமிழ் நீராய் வந்து விழும் ஒவ்வொரு நிகழ்விலும் 
சராசரி எதிர்பார்ப்புகளையும் 
ஏமாற்றிருக்கிறிர்கள்
நீங்கள் 

துடிக்கும் புழுவாய் வெடித்துச்
சிதறுகிறது
கண்ணீர் உணர்வின்
கொலையோ
தற்கொலையோ
நிச்சயமாய்
நிகழப் போகின்றது,

காரணம்
நீங்களாகவும்
இருக்கலாம்
உங்களுக்கும் எனக்குமான
பொதுவான பழகிய பதிலொன்றுண்டு
என்னைப் போல் 

நீங்களும் இயலாமையென்றே எண்ணிக் கொள்ளுங்கள், 

நானும் பதிலொன்று
தேந்தெடுத்தாகிவிட்டது
பார்வையற்வர்கள் முன் 

ஊமையாய்
உடையாதே
விழகிச் செல்
இவர்கள் உனக்கானவர்கள் அல்லவென்று

கண்ணீரைஉதறித் தள்ளுகிறேன் 


உணர்வொன்று உயிரின்றி 
நடை பிணமாய் நானாய்
நீங்களும் எண்ணிக் கொள்ளுங்கள் 

எனக்கானவன் இவனல்லவென்று 
அது போதும் முகமூடியற்ற என் நிர்வாணத்திற்கு.

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...